தற்சமயம் சிங்கப்பூரிலிருந்து....
அனைவருக்கும் இனிய வணக்கம்,
எனது வலைப்பக்கத்தில் வலைப்பதிவேற்றி அதிக நாட்கள் ஆகின்றது. வேலைப்பணி காரணமாகவும் மற்றசில தனிப்பட்ட காரணங்களினாலும் செய்ய முடியாததாகி விட்டது. நான் பெங்களூரில் பணியாற்றிக் கொண்டிருந்தேன் என்பதை அறிவீர்கள். ஆனால் தற்சமயம் சிங்கப்பூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் கணிப்பொறி நிபுணராய் பணியாற்றி வருகிறேன்.
சிங்கப்பூர் உங்களனைவருக்கும் அறிமுகமான நாடு. சுத்தமான, சுகாதாரமான, மிகவும் கட்டுப்பாடுள்ள நாடு எனக் கேள்விப்பட்டிருப்பீர்களெனினும் நமக்கான சிறப்பம்சம் என்னவெனில் தமிழ் மொழியை அலுவலக மொழியாகக் கொண்டுள்ள நாடு. ஆக நம்ம ஊரில் இருப்பதைப் போன்றதொரு நினைவை நம்முள் நிறுத்தும் பண்பான நாடு சிங்கப்பூர். இந்த மாதம் அக்டோபரில் இருந்து இங்கே பணிசெய்து வருகிறேன் எனபதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
விரைவில் சிங்கப்பூர் பற்றிய பதிவுகள்...
நன்றி வணக்கம்.
1 மறுமொழிகள்:
mika nanraka ullathu thola
Post a Comment